Thursday, August 14, 2008

ஆணவம் நீங்கிய சிங்கம்



ஒரு காட்டில் இளம் சிங்கம் ஒன்று வாழ்ந்து வந்தது. அதற்கு வாலிப வயது. அதனால், தான்தான் உலகிலேயே பலசாலி என்று நினைத்து வந்தது. கர்ஜனை செய்து காட்டிலுள்ள விலங்குகள் அனைத்தையும் பயமுறுத்துவது அதன் வழக்கம்.
அதே காட்டில் கிழ முயல் ஒன்றும் வாழ்ந்து வந்தது. அதற்குச் சரியாகக் காது கேட்காது. ஒருநாள் சிங்கம் கர்ஜித்துக் கொண்டு வந்தபோது முயல் புல்லைச் சாப்பிட்டுக் கொண்டிருந்தது. முயலைப் பார்த்த சிங்கத்துக்குப் பயங்கர கோபம் வந்தது. ᅠ"ஏய்ᅠ! கிழட்டு முயலே, உன் மனதில் நீ என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாய்? என் கர்ஜனைக்குப் பயந்து ஓடாமல், தைரியமாக இங்கேயே இருக்கிறாயே, என்ன ஆணவம் உனக்கு?" என்று கர்ஜித்தபடி கேட்டது.

கீழ்க்காணும் வினாவிற்கு விடையளிக்கவும்.

1. சிங்கம் தன்னைப் பற்றி என்ன நினைத்தது?